உன் சந்திப்பு தந்த ஞாபகங்கள்….


உன் சந்திப்பு தந்த ஞாபகங்கள்….
மனக்கிடங்கின்
ஆழங்களில் உன்னைப்பற்றிய
மழை வானம் தாகத்துடன்
தூரலை என் வானில்
சபிக்கின்றது…..
உன்னை மறக்கவே முடியாத
கணங்கள் மட்டும்
சந்திப்பின் வாசலில்
பிரிவதும் பின் சந்திப்பதுமான
இடைவெளிகள் என்னை
ஏனோ ரணப்படுத்தி விடுகின்றது…