நீண்ட பொழுதொன்றில்அறையெங்கும் பரவும்
சூரியனின் செங்கதிரின் ஒளி நாளில்
காற்றின் மொழி வரிகள்
சுனியத்தின் இசை வரிகள் போல
வானத்தில் தனித்து
பறக்கும் பறவையின் தனிமை குரலின்
கையெழுத்தை திருத்தும்
நாள் ஒன்றில்
நிமிர்ந்த கனவொன்றின்
ப்யணிக்கும் தினபடி நாளில்
மனம் தேடும் புதிய உறவுக்கான
சந்திப்புக்கலின் ஏக்கங்கள் மீதமாக…
செம்மைப்படுத்தும் வரிகலுடன் சிரிபொலி பரவும்
அறையின் கண்ணாடி
வளையத்தில் மீனீன் மாதிரியாக கைதிகள்
கைதிகள் போல் சப்தம்
ஏதுமற்று
வழிப்போக்கனின்
தேடலாய்….
வாழ்வு நம் அன்றாட காட்சிகளை ஒரு கூனியக்கிழவியின் மாய
மாளிகையின் அடைப்பட்ட தவிப்பாய்
சிரிபிலும் புதிதாக பூக்கும் நட்பிலும் காற்று மொழியின்
கவிதை வரிகளுடன் பகிர்தல் படரும் கொடிமரமாய்…..!

