Posted by: mariemahendran | January 6, 2010

vamsi books

வம்ஸி புக்ஸ்
வெளியிடாக எனது சினமா புத்தகம் வெளியாகியுள்ளது நண்பர்களே..
சென்னை புத்தக
கண்காட்சி கடை எண்: 214 பெறலாம். படித்து கருத்திடவும் நண்பர்களே.
மாரிமகேந்திரன்

வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

Posted by: mariemahendran | December 15, 2009

இடம் பெயர்வு..


காற்றின் தேடல்
முற்றுப் பெற்றதன் போது
நகரத்தில் தேடிய
அவனிடம் அடையாளமற்ற
உடல் ஒன்று ஒப்படைக்கப்பட்டது…

கோடுகளும் வண்ணங்களும்
உடலில் இருப்பதை அவன்
கண்டுகொண்டான்…
காதலியின் யோனியையும்
உடலில் இருந்து அவன் மீட்டெடுத்தான்….
குறைந்தபட்ச மகிழ்ச்சியை அது அவனுள்
தந்தது…

மிருகங்களின் வகையினை தன்
உடலில் தேடிபோது
தெருநாய்களின் ரேகைகள் மட்டும்
சுயங்களை கேலி பேசி சிரித்தது…
நடக்கும் போதும்…
சிரிக்கும் போதும்…
புணரும் போதும்…
உட்காரும் போதும்..
அனைக்கும் போதும்..
அவனுக்குள் இருந்து
ஒவ்வொரு உடலாக வெளிப்பட்டது…

அந்த இறுதி நாளில்
அவன் தன் உடலைத்தேடி
தெருவெங்கும் திரிவதாக
நண்பர்கள் கூறினர்..
எந்த உடலை என்பதான
கேள்விகள் என் மனதில்
எழுந்தது…

Posted by: mariemahendran | November 12, 2009

கையெழுத்து…

happy_sad_face

எல்லா கனவுகளையும்
இழுத்துப்போய்
சுக்கு நூறாக்கி
சிதைந்து கிடக்கிறான் இவன்

இனி
மீட்சி பெற
வழியேதும் இல்லை…
வாழ்வின் எல்லா கதவுகளும்
சிறையாகிப்போனது…

வீரியமற்ற சோம்பேரியான
மலட்டு மனிதன் இவன்
இந்த உலகத்தில்
வாழ்வதற்கு இனி ஒன்றுமில்லை

ஒரு பெண் கூட
நேசிக்கவில்லை
பணக்காரனுக்குத்தான்
பெண்களின் சிநேகம்…

இவன் போன்ற
பைத்தியத்தை எந்தப்பெண்
தீண்டுவாள்!

வாழத்தெரியாத
பைத்தியம்
சோம்பேறி… கழுதை…மக்கு….

ஆசைகளை மட்டும்
சுமந்து திரியும்
தெரு நாய் இவன்…
மரித்த அழுகிய பிணம் இவன்!

வாழ்வை விட
சாவு தேவலை போல்…

சாவதற்கும்
தைரியமற்ற கோழை…
வாழத்தெரியாதவன்
சகித்துக்கொள்ள முடியாதவன்…
வெறும் பிணம் தான் இவன்!…

ஒரு நள்ளிரவில் மன சுமையோடு…
sad_man

அறையின் தனிமை...குறும்படம் -மாரி மகேந்திரன்

- பாரதி நிவேதன்

அவள் மிக அழகான பெயர்ப்
பலகைகளைச் செய்யக்
கூடியவளாய் இருந்தாள்.

உணர்வுகளை எழுத்துகளாக்கும் வாதையினை விடவும் ஒளியாக்கும் ஆக்கம் நல பரிசளிப்பின் திரையைச் சார்ந்த அங்கமாகிறது. திரையின் பெரும்பான்மை, வடிகாலின் மீப் பெரும் பகுதியாகும்போது உள் அலையின் வீச்சை புலப்பிக்கக் கூடிய குறும்படங்களின் வினை மீச்சிறு பகுதியாகவே கவனப்படுத்தலின் அவசியத்திற்கு இடமாகிறது. “அறையின் தனிமை” 18 நிமிடங்களின் மனித வாதையின் வீச்சு.

மனிதவாதை இக்காலம் வரையிலும் பல அவதிகளின் பாற் பிரிந்துணரப்பட வேண்டியது. இங்கு “அறையின் தனிமை” எனும் பெயரடைவிற்குள்ளாகவே ஒரு குளத்தில் விழப்போகும் கல்லினை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கு, விருந்தினன் அறையின் தனிமைக்குள் அகப்பட்டுப் போகிறான். (நமது அறையின் தனிமைகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன?)

விருந்தாளியைப் போன்றே நம்முள் யாரோ ஒருவர் வீட்டின் கடவுளாக மாறுவதென்பது நகர வாழ்க்கையின் பரிசு. குருவிகள் திரும்பும் வரை கூடு விருந்தாளிக்குச் சொந்தமானது. விருந்தாளி மனிதன் எனும் பட்சத்தில் நடக்கிற கதையே வேறு. அவர் இவ்வீட்டிற்குள் அடைக்கலமாகவோ, ஏதும் வழியற்றவராகவோ நுழைந்திருக்கலாம். அறையின் தனிமை வெளிச்சம் வீசும் சில நொடிகளுக்கு முன் இதைப் போன்ற அவதானிப்புகள் இருக்கலாம். இதனை வெகு சாமர்த்தியமாக நகர்த்தி வைத்து விட்டு விருந்தாளி ஒருவன் நம் வீட்டிற்குள் என்னென்ன செய்கிறான் பார்ப்போம் எனும் அற்பத்தையும் துடைத்துவிட்டு தொடர்கிறது நாம் சொல்ல கூச்சப்படும் கோணம். இடைச்செருகல்:: நாம் விருந்தினராய் சென்ற வீட்டில் அவர்கள் இல்லாத போது என்னென்ன செய்வோம்?

நகரச் சூழல் வீடு. விருந்தினன் மட்டும் வீட்டில். இரும்புக் கேட்டின் முன் நின்று எவரோ வருகையின் தேவையினை அவசியத்தினை உணர்த்தும் விதமாக பின்னர் கேட்டினை தாழிட்டு, பின் திரும்பி பார்த்து (பாதங்களின் அலைவு மட்டும்) பின்னர் கதவினைச் சாத்தி உள்ளே விழுந்துவிடும் விருந்தினன் உண்மையில் மனதின் அறையைத் திறந்து விழுந்தவனாகிறான்.

வீட்டிற்குள் அனாதையாக அடைபட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் முன் பார்வையாளரை மிக அருகே தனக்குள் கடத்திக் கொள்கிறது. இப்போது திரைப்படத்திற்குள் நாம் ஏதோ செய்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்பது தாழிடங்கள் மூலமாக நாம் பெற்றது.

அதையும் துருவிப் பார்க்காத, எல்லாவற்றையும் ரகசியம் என்று அர்த்தப்படுத்தி எச்சில் கூட்டி விழுங்கி ஒவ்வொன்றையும் உடைத்துப் பார்த்து, ஆடைகளை, ஆடைகளின் நெடிகளை, பத்திரப்படுத்தப்பட புகைப்படங்களை, வீசியெறியப்பட்ட காகித எழுத்துக்களை, கையெழுத்து வரிகளின் அர்த்தங்களை, புதிதான வாசமிக்க பொருட்களை இப்படி இன்னும், இன்னும் ஏராளமான உளவியலின் அபரிமித தித்திப்போடு இல்லாமல் தனிமையினை செரிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பார்ப்பது மின் விசிறியைப் பார்ப்பது, காலாட்டிப் படுப்பது, சிறிது அயர்வது, எழுவது, இணையத்தை முடுக்குவது, சிறுநீர் கழித்து விடுவது, ஜன்னல்களில் பார்வையை ஓட விடுவது, ஒவ்வொரு அறையாக காலத்தைச் சபித்து நடப்பது, மின்விசிறியின் கீழ் படுப்பது மின் விசிறி சுழல்வது கண்ணாடி பார்ப்பது முகத்தை முறுக்கி வாயை உப்பி கண்களை முழித்து சேஷ்டைகளை செய்து பின்னர் சட்டையை கழற்றி பனியனை கழற்றி பின்னர் கைலியை கழற்றி…

இவற்றுக்குள் ஓடவிட்ட எல்லா நொடிகளுக்குள் சிலந்தியும் எறும்பும் இருக்கலாம். நகர இரைச்சலை வடித்தெடுத்த வீட்டிற்குள் இசை கூட மனித தனிமையை கலைத்துப் போடவில்லை. வீடுகூட புறமாகிவிட்டது. ஆனால் இவை மட்டுமா, மீண்டும் ஓடவிடலாம். அப்போது,

இங்கு, பேசப்படாத படத்தைப் பொறுத்தவரை காண்பிக்கப்படாத பகுதிகளும் காண்பிக்கப்பட்ட பகுதியாவதன் தோற்றம் திரைக்கதையின் வலுவினால் ஆனது.

poster

‘நவ’த்தில் ‘நான்’ எனும் தனிமையை உணர்வதற்கு அத்தியாவசியமில்லாத இயந்திர பெருவெளியானாலும் அதனுள் ‘நான்’ எனும் அங்கத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது முகப்புகளுக்கு பின்னால் எனும் நிகழ்வு அரிதான சந்தர்ப்பத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் போல.

அந்நிகழ்வு, பல வேளைகளில் அறிந்துணர வேண்டிய பக்கங்களை கடிகாரத்து முட்களுக்கிடையே இழித்தூற்றிய பின்பு, அறிந்தும் அறியாமலான அங்கலாய்ப்பும் அமைதியுமாக கடிகாரத்துடனேயே ஒன்றாக வேண்டிய கட்டளைக்குள் வந்தாக வேண்டியிருக்கும்.

கட்டளையை யாருக்கும் தெரியாமல் அனுப்பி நமக்கான சிறகைப் பொருத்தி தந்து விடுவதும் ஒரு பக்கம் நிகழ்ந்தேறுதல் உண்டு. அறையின் தனிமை நம் வாழ்நாளில் ஒரு புள்ளியாய் நடந்துவிட்டிருக்கக் கூடியதானாலும், நடக்கப் போவதான புள்ளியை ரசிக்க விரும்பும் படியாய் அமைவதில்லை.

அறிவு வேலை செய்ய ஆரம்பித்த கணத்தை அதன் மனசாட்சியின் மீது கை வைத்துக் கேட்டால் பலமா பலவீனமா என்பது ஒருபக்கம். கற்பித்த அறிவுக்கும் இயல்பான மனதின் இயங்கு தளத்திற்கும் நிரம்ப வித்தியாசப் புள்ளிகள் இருக்கும். இரண்டுக்குமான போர்களத்தின் வாதனைப்பாடுகளாக கடைத்தனங்கள் எனப்படும் கிறுக்குத்தனங்களை சொல்லப்படுகிற முன் வைப்புகளையும் சொல்லிக் கொள்ளலாம். இதன் வெளிப்பாடாக வாசிப்பும் எழுத்தும் எனவும் விருந்தினனின் வினை அமைகிறது.

இது உளவியல் சார்ந்த ஒன்றாக குறுகிப் போகும் அபாயத்தின் முன் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனித இயல்பினன் அதிர்வுகள், குடி கொண்டிருக்கிற மனதின் இயங்கியலில் தவிப்புகள் சார்ந்த ஆளுமைகள் வேரறுத்து வீழ்வது நலம். இது குறும்படத்திற்கான துருப்புச் சீட்டாகவும் பயன்படலாம்.

இலையின் பச்சைய செழுமைகளை இன்று ரசாயனத்தில் பெற்றுக்கொள்கிற சூழ்நிலையில் (அதாவது கலைப்படைப்பு உள்பட) இயல்பான வித்துவின் செழுமையைக் கண்டடைய “அறையின் தனிமை”யும் உதவக்கூடும்.

(படத்தொகுப்பு : இளம்பரிதி – ஒளிப்பதிவு : ஹவி – இயக்கம் : மாரி மகேந்திரன்)

thanks: Kanavu
பிப்ரவரி 2008

Posted by: mariemahendran | October 12, 2009

நீ ஒரு தேசமும்…

love is pain

இப்படி ஆனதில்லை
என்னாலும்…
மரணத்தின் தவிப்பை
தருகின்றன உன் ஞாபகங்கள்…

உன் புகைப்படங்களை என்
இதயச்சுவா்களில் சிலுவையாக
அறைந்து கொண்டாலும்
ரணங்கள் தீரவில்லை…

கற்பொழுக்கம் நிறைந்த எனது
இரவுகள் இப்போது
சா்வ நாசமாகிக் கொண்டிருக்கின்றது
தோழி…!

சாவின் வாசனைணை
என்னாலும் உணர முடிகின்றது…

நீ
ஒரு தேசமும்..
நான் ஒரு தேசமுமாக இருந்தாலும்
உன் சுவாசத்தின்
தாள லயங்களை எனது
கனவின் வரைப்படங்கள்
உன் புகைப்பட காட்சிகளாக…

பெரிதாக ஒன்றும்
சாதித்து விட வில்லை
ஆனாலும்…
உனக்காகவாவுது…
என்
கனவின் கயழ் விழியை கைப்பற்ற
தோன்றுகின்றது தோழி…

Posted by: mariemahendran | September 11, 2009

maheindren
இருப்பிடம் தவறிப்போன
தவிட்டுக் குருவியின்
தவிப்பை போல
நாளைய வாழ்வு பற்றிய
ஏக்கங்கள் எனக்கும்
தொற்றுகின்றது….

உனது முடிவை மாற்றிக் கொள்ளச்
சொல்லும்
வாழ்வின் வண்ணம்
ஒபபனைகளையும்
இனைத்து தூரப்படுத்துகிறது…

தீடீரென்று
காதலை முறித்து
மௌனமாகி போகும்
உனது குரல்களின்
வசீகர மர்மத்திற்கு
பின்பு மறைந்திருக்கும்
இரகசியங்களை உனது
கனவனோடும் பகிர்ந்து…
அந்நரங்மாக பெய்த
மழையின் வரிகளை உன்னால்
எப்படி மறக்க முடிகிறது…

உனது இதயத்தைப் பற்றிய
மையப் புள்ளயாக எனக்கு
மட்டும் காட்டிய மச்சத்தை
பற்றிய மனது மட்டும்
மையப்புள்ளியாக அவ்வப்போது
நீர்கோடுகளை
வரைகிறது…

உனது வசிகர நாட்களில்
எனது விரல்கள் தீண்டிய
குறியின் அடை மழையில்
முத்தங்களும் ஸ்பரிசங்களும்
உனது அம்மாவுக்காகவும்
அப்பாவுக்காகவும் மறந்து
போகலாம்…!!!

ஆனால்
மனவெளிகளில் இருள்காட்டில்
மிருகங்களை
உனது விளையாட்டு
பொம்மைகளைப் போல
உன் உறக்கத்தை
தட்டி எழுப்பலாம்…!

02

உனது மார்பு கசக்கும்
உதடுகளில்
பிம்பங்களும் நடு நெஞ்சின்
மையத்தில் உன் மச்சங்கள்
உனைப்பார்த்து
கேலி செய்து உனது
ஒழுங்கீனமான
நடவடிக்கையை
காலத்தின் இருள்கள்
உனது நிழலாக வரலாம்..?

உனது பிரார்த்தனைகளும்
வழிபாடுகளும்
உயிர்ப்பற்று சிதிலமாகலாம்…

பாவியுடனான வழிபாடாக
ஏதோ ஒன்றை
உனது ஆத்மா இழக்கலாம்…

அல்லது

உனக்கு மறப்பதற்கு
முடிவது இலகுவானதென்றால்
அனைத்தையும்
ஒரு பஸ் பயணத்தைப் போல
மறந்து விட்டு
குழந்தைகளை மடியில்
வைத்து கொஞ்சலாம்…

இன்னும் நீயும்
உன் கனவனும்
கிரிக்கெட் மெச் பார்க்கலாம…

சுதர்ஷினிக்கு….
<strong

காற்றின் வெப்பத்தில்
உனது கூந்தல் மயிர்
எனது அறையில்
மேசை ஓரமாக அசைந்தது…!

நீ
அமர்ந்திருந்த மெத்தையின்
அடையாளங்களையும்
அதன் வெப்பத்தையும்
நான் தேடிப் பார்த்தேன்…!

மூச்சி வாங்கிய
தேகத்தின் சிலிர்ப்பை
நான்
அன்றைய தினம் முழுவதும்
ஓர் பழைய திரைப்படக்
காட்சியை போல மனதில்
ஓட்டிப்பார்த்தேன்…!

​கொட்டித் தீர்த்த
மழையுடன் அம்மாவின்
குரல் கேட்டு
நாம் உதடு பிரித்து
அவசர அவசரமாக
பழைய நிலைக்கு
வந்த போதும்…
நீ
குறுஞ்​ெசய்தி வழியாக
எனக்கு அனுப்பி வைத்திருந்த
காதல் மொழிகள்
நமக்கும் நம் தடம் வரையும்
காதலுக்கும் ஏனோ
னம் புரியாத ஓர் பயம்
மட்டும்

நீண்ட சாலையொன்றில்
யாகம் கேட்கும்
யாருமற்ற மனிதனின்
முகத்தை போல
நானும்
முன்பு போல
தனித்து விடுவேனா சதாகாலமும்…?
என்ற நெருங்கும் பயத்தில்
கழிகின்றன எனது
வெப்பமான வேளைகள்

09-06-2009
marie mahendran

Posted by: mariemahendran | August 25, 2009

கவிதை…

my poem

 

 
fullpicture10

 1901ம் ஆண்டில் போயர் சிறைச்சாலையில் போர்க் கைதிகளுக்குத் திரையிடப்பட்ட ஒரு மௌன செய்திச் சுருளே இலங்கையில் (1972 வரை சிலோன் என்றழைக்கப்பட்ட) திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். 1903ல் கொழும்பில் முதல் திரையரங்கம் திறக்கப்பட்டது. 1945ல் ஆசியாவின் முதல் திரைப்படச் சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்படச் சங்கம் தொடங்கப்பட்டது. இலங்கை திரைப்படத்
தயாரிப்பின் வரலாற்றில் மௌனப் படக்காலம் என்ற ஒன்று இல்லை.

1947ல் சிங்கள மொழி உரையாடலோடு தயாரிக்கப்பட்ட கடவுனு பொறன்துவ (உடைந்த நம்பிக்கை) இலங்கையின் முதல் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தென்னிந்தியாவின் சித்ரகலா மூவிடோன் என்ற திரைநிறுவனத்திற்காக எஸ்.எம். நாயகம் என்ற ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட நடிகர்-நடிகையரைக் கொண்டு ஏராளமான சிங்கள மொழி திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள் இந்திய இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதால் இப்படங்களின் மனோநிலை, உருவாக்கம்
மற்றும் வெளிப்பாட்டில் தென்னிந்தியாவின் பாதிப்புகளைக் கொண்டிருந்தன. கதை அமைப்பு மற்றும் நடிப்பு வெளிப்பாட்டு முகைள் இரண்டிலும் தென்னிந்தியத் திரைப்படங்களின்
நேரடியான மறுபிரதிகளாகவே பல திரைப்படங்கள் இருந்தன. 1940களின் பிற்பகுதியில்தான் திரைப்பட வர்த்தக தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பிரதான நிறுவனங்கள், இலங்கை திரையரங்குகள், இலங்கை படப்பிடிப்பு நிலையங்கள் மற்றும் இலங்கையின் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுயமான இலங்கை திரைப்படத் தொழிற்சாலை உருவானது. இதன் பின் இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களின் ரசிகர்களாக இருந்தவர்கள் சிங்களத் திரைப்படங்களின் ரசிகர்களாக மாறத் துவங்கினர்.

1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் அதையட்டி
ஏற்பட்ட தேசிய எழுச்சியும் இந்தியர்களின் ஆளுமையிலிருந்து சிங்களத் திரைப்படஙகள் உருவாக வழிகோலின. 1951ல் சிறீசேனா விமலவீரா என்பவரால் தொடங்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) தயாரிக்கப்பட்ட பொடி புத்தா (இளையமகன்) என்ற திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமா பிறப்பதற்கு அடித்தளமிட்டது.

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன.

திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும் பங்குபற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே
பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக
இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத்
திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள; ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள்.
இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

2307160383_d1ea4ec413

தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ்
திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல
இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த
வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே
இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன்
என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த்
திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி
இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம். சுதந்திரம் பெற்ற புதிதில்
மக்களுக்கு அதைப் பற்றி அறிவுறுத்த செய்திப் படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரிப்பதற்கென 1948ல் அரசு திரைப்படக் குழு நிறுவப்பட்டது. குறிப்பிடத் தகுந்த அவற்றின் உண்மையான படைப்பாக்கத் திறனுக்காகவும், உயர்ந்த திரைப்பட உருவாக்கத்
தரத்திற்காகவும் பல அரசுப் படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றன.

எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர்கள் பலர் உருவாகி வளர்ந்த நாற்றங்காலாக புகுரு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அரசு திரைப்படக்குழு அரசின் நிரந்தர பிரச்சாரக் கருவியாக சுருக்கிய காரணத்தினால் பிற்காலங்களில் அதன் கலைத்தரம் தாழ்ந்து போனது.

அரசு திரைப்படக் குழுவின் வழிவந்த பிரபல திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பெரீஸின் முதல் திரைப்படமான
‘ரேகாவா’ (விதியின் கோடுஃ1956) சிங்கள சினிமாவின் முகத்தை நிரந்தரமாக மாற்றியது. தொழில்முறை அல்லாத தேர்ச்சியற்ற கலைஞர்களையும் ஸ்டூடியோ அல்லாத வெளிப்புறக்களையும்
படப்பிடிப்பில் இயற்கை ஒளியையும் அவர் பயன்படுத்தினார்.

முதல்முறையாக மக்களும் அவர்களின் பண்பாடு மற்றும் சுற்றுச்சு10ழல் ஆகியவையும் யதார்த்தமாகத் திரையில் சித்தரிக்கப்பட்டது. இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டு அதன் கவித்து மற்றும் நேர்மையான கதையாடலுக்காக சர்வதேச விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

லெஸ்டரின் அடுத்த படமான ‘கம்பெரலிய’ (கிராம பிறழ்வு,1963) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாகவும்
விமர்சன ரிதீயாகவும் உலக அளவில் வெற்றி பெற்றது. வியாபார சினிமாவின் ஒரு மைல்கல்லாகப் பரிசீலிக்கப்பட்ட இத்திரைப்படம் இலங்கை சிங்கள சினிமா தெளிவான பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகோலியது. 1965ல் புதுதில்லியில் நடைபெற்ற 3வது சர்வதேச
திரைப்பட விழாவில் இத்திரைப்படம் தங்கமயில் விருது பெற்றது.

1960களில் ‘கம்பெரலிய’ குறிப்பிடத்தகுந்த படங்களைத் தயாரிக்க ஏனைய திரைப்படக் கர்த்தாக்களுக்கான புதிய பாதையையும் தரத்தையும் நிர்ணயம் செய்தது. அதற்கான சில உதாரணங்கள்… தசக் சிதுவிலி (பு.னு.டு.பெரோ 1965) பரசுது மல் (காமினி பொன்சேகா
1966) சத் சமுதுரா (ஸ்ரீ குணசிங்கே 1966) மற்றும் ஹண்டே கதாவா ( (சுகந்தபால செனரத் யாப்பா 1969) இப்படியான சினிமா போக்குகளை கம்பெரலிய திரைப்படம் உருவாக்கியது.

1970ல் யைமப்படுத்தப்பட்ட திட்டத்தை முன்மொழிந்த சோசலிசக் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய இலங்கை சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது தேசிய திரைப்படக் கழகம் என்று அழைக்கப்படும் அரசு திரைப்படக் கழகத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் திரைப்படத்துறை கொண்டுவரப்பட்டு தேசியமயமாக்கப்பட்டது. ஓர் சுயமான இலங்கை திரைப்படத் துறையாக ஒழுங்கமைப்பதும்இ பாதுகாப்பதும் வளர்ப்பதுமே
ஆரம்ப கால லட்சியமாக இருந்த அதன் மூலம் பதினைந்து வருடங்களில் தரமான திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகளிலும்இ படைப்பாக்கத் திறன்களை வளர்ப்பதிலும் தனது இலக்கை எட்டியது. ஆனால் 1980களின் இறுதியில் அதன் பரந்தஇ நீண்டகால விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் முழுமையடையவில்லை. திரைப்பட விநியோகத்தில் வரைமுறையற்று ஈடுபட்டது போன்ற சில காரணங்களினால் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் ஒட்டுமொத்த ஏகபோகமாக இருந்த சிங்கள திரைப்படத்துறை இலங்கை சினிமாவின் அழிவை துரிதப்படுத்தியது.

80களின் உள்நாட்டு இனவன்முறைகள் அழிவினால் சிங்கள திரைப்படத்துறை அழிவை நோக்கி நகர்ந்த அதே தருணத்தில் 83ல் வெடித்த ஜூலை இனகலவரத்தினால் முகிழ்ந்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் திரைப்படத் துறையும் முற்றாக அழிந்து போனது. தமிழ் -சிங்கள உறவின் பின்னலைப் போலவே இலங்கை தமிழ் திரைப்படத்துறையும் சிங்கள-தமிழ் கலைஞர்களின் ஒன்றிணைவோடு செயல்பட்டதை இங்கே நினைவு படுத்தவேண்டும்.

இப்படியான உள்நாட்டு அரசியல் முரண்களில் நசுவுற்ற திரைப்படத்துறை பின் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் வழி தன்னை நிலை நிறுத்த போராடியது.ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முன்னணிப் படங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் காலமாகவும்இ அழகியல் வடிவமாகவும் தொழிலாகவும் சினிமாவைப் பற்றிய விவாதம் தீவிரமாக எழுத்து, சோதனை முயற்சி ஆகியன நிகழ்ந்த ஓர் முக்கியமான காலகட்டமாகவும் 19709களின் பத்தாண்டுகள்
இருந்தன.

இக்கால சு10ழலில் புதிய போக்குகள் (பாணிகள்) உருவாயின. வளர்ந்து வந்த சினிமா மொழியின் படைப்பாக்க சாத்தியப்பாடுகளையும், நடைமுறையையும்
புரிந்துக்கொண்ட பல எழுத்தாளர்களும்இ இலக்கியவாதிகளும் குறிப்பிடத் தகுந்த திரைப்படங்களைத் தயாரித்தனர்.

மஹாகாம சேகர, ரஞ்சித் லால், னு.டீ.
நிஹல்சிங்கே, மற்றும் தர்மசேன பதிராஜா ஆகியோர் இத்தகைய இயக்குனர்களில் சிலர்.

மூன்றாம் சினிமா என்ற கருத்தாக்கம், சமூக யதார்த்தவாதம் என்ற பாணி இரண்டையும் உள்ளடக்கிய மாற்று திரைப்படத் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இலங்கை திரைப்பட ரசிகர்களுக்கு அஹாஸ் கவ்வா (1974) பேம்பரு அவித் (1978) போன்ற
திரைப்படங்கள் ஒருசேர அறிமுகப்படுத்தின.

மேலும் 1970களின் விவாதத்திற்குரிய திரைப்பட கர்த்தாக்களாக இலங்கை சினிமாவின் இன்றைய பெரும்பாலான இயக்குனர்களால்
பரிசீலிக்கப்படுபவர்கள் ர்.னு. பிரேமரத்னே (சிகுருலியா 1975) வசந்த ஒபயசேகர (வெஸ்கத்தோ 1970) மற்றும் சுமித்ரா பீரீஸ் (கேஹீனு லமாய் 1978) ஆகியோரே.

பெண்களை வலிமையான கதாபாத்திரங்களாகவும்இ நேர்மையாகவும்இ சித்தரித்தற்காக சுமித்ரா பீரீஸ் என்ற பெண் இயக்குனரின் திரைப்படங்கள் முன்னோடியாகக்
கருதப்படுகின்றன.

1980களில் பிரபலமான இயக்குனர்கள் தங்களின் படைப்புப்
பாணியில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தபொழுதுஇ இப்பத்தாண்டுகளில் தரமான இரு இயக்குனர்களாக தர்மசிறி பண்டாரநாயகேயும்இ திஸ்ஸா அபேசேகராவும் உருவாகி வளர்ந்தனர்.

லேட்டரின் விற்காயா (1987) இப்பத்தாண்டுகளின் விவாதத்திற்குரிய திரைப்படம் எனலாம். 1980களின் இறுதியிலும் 1990களிலும் தேசிய திரைப்படக் கழகத்தின் கட்டுப்பாடான விநியோகக் கொள்கைகளாலும் ஏராளமான தரம் தாழ்ந்த திரைப்படங்களைத
தயாரித்தாலும் இலங்கை திரைப்படத்துறை அழிவை சந்திக்க நேர்ந்தது. திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்வது குறைந்து போனது. தொழில்நுட்பக் கலைஞர்களும்,
நடிகர்களும் மிகவும் லாபகரமான தொழில் கூடாரமாக இருந்த தொலைக்காட்சி நாடகங்களில் பணியாற்ற நுழைந்தனர். சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் நல்ல தரமானதொரு படைப்பாக்கமாக
இக்கால கட்டங்களில் வளர்ந்ததை குறிப்பிட வேண்டும்.

இருந்த போதும் 1990களில் பிரசன்ன விதானகே, சுதத்த தேவப்ரியா, பூதி கீர்த்திசேனா, ஜேக்கன் அந்தோனி, மோகன்
நியாஸ்இ லிண்டன் சோமகே, அசோகா ஹண்டகாமா, உதயகாந்தா வர்ணசு10ர்யா மற்றும் சோமரத்னே டிஸ்ஸநாயகே போன்ற சில சிறந்த இளைய தலைமுறை இயக்குனர்கள் சிங்கள திரைப்பட துறையில் உருவாகினார்கள்.

இவர்களில் ‘பிரசன்ன விதானகே’ தனது விருது பெற்ற
திரைப்படங்களான பவரு வால்லலு (சுவருக்குள் 1977) மற்றும் புரகண்ட கலுவர (ஒரு புவர்ணமியின் மரணம் 1997) போன்றவற்றிக்காக சர்வதேச அளவில் மிகுந்த பாராட்டுக்களைப்
பெற்றுள்ளனர். இதே போல் அசோகா ஹதகாமா தனது வுர்ஐளு ஐளு ஆலு ஆழுழுN என்கிற சிங்கள
சினிமாவிற்காக உள்நாட்டில் சர்சைக்குரிய இயக்குனராகவும், பௌத்த பேரினவாத போக்கை எதிர்க்கும் இயக்குனராக இலங்கை சிங்கள சினிமாவில் கருதப்படும் சிறப்பானதொரு
இயக்குனராக கருதப்படுகிறார்.

தேசிய திரைப்படக் கழகத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜனவரி 2000ல் திரைப்படத்துறை
தாராளமயமாக்கப்பட்டது. இருந்த போதும் தேசிய திரைப்படக் கழகம் அதன் வழக்கமான செயல்பாட்டில் இயங்கி வருகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக பல்வேறு வரி
சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு திரைப்படங்களை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்து கொள்ள தனியார் துறைக்கும் திறந்த அனுமதி வழங்கப்பட்டது.

ஏனைய திரைப்படத்துறை தயாரிப்பாளர்களின் மத்தியில் ஒரு கூடுதல் முன் முயற்சி மற்றும் போட்டி மனப்பான்மையில் இயங்கும் தேசிய திரைப்படக்கழகம் இலங்கை சிங்கள
சினிமாவுக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்தாலும் இலங்கை திரை வரலாற்றில் தனி இணையாக வளர்ந்த இலங்கை தமிழ் சினிமா வளர்வதற்கு தேசிய திரைப்பட கழகம் எவ்விதமான முயற்சியும் செய்யாதது வருந்த செய்கின்றது.

சிங்கள சினிமாவுக்கு இணையாக தனி தன்மையோடு வளர்த்தெடுக்க பட வேண்டிய ஈழ சினிமாவுக்கு இலங்கை அரச எவ்விதமான அக்கறையும் காட்டாதது இன முரண்பாட்டின் வெளிப்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

இன்றைய புதிய இலங்கை அரசியலில் சிங்கள சினிமாவுக்கான
அத்தனை வேர் தன்மையோடும் தமிழ் சினிமாவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை கலைஞர்களின் ஒட்டுமொத்த அபிலாசையாகும். அது மலர இருக்கும் புதிய ஈழ
அரசியலின் கவன மையத்தில் ஒரு அனுசரணையாக கருதப்பட்டாலே இலங்கையின் சினிமா இன்னும்
பல அரிய சாதனைகளை நிகழ்த்தும் களமாக மலரும்.

Posted by: mariemahendran | December 24, 2008

ஃபிலிம் சொசைடிகளின் தேவை

ஃபிலிம் சொசைடிகளின் தேவை

bitmap-in-mahen
உலக சினிமா வரலாற்றில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கும் நல்ல சினிமா  பேரெழுச்சியாக வளர்ந்ததற்கும், திரைப்பட சங்கங்களின் பங்களிப்பை மறந்து விட முடியாது. ஓவ்வொரு தேசத்திலும நல்ல சினிமா வளர்வதற்கு  பெரிதும் திரைப்பட சங்க இயக்கங்கள் கைகொடுத்திருக்கின்றது. ஆந்த வகையில் திரைப்படக் கழகம் என்பது என்ன? ஏன் நமக்கும் திரைப்பட கழகம் தேவை என்பதையும், ஒரு திரைப்பட சங்கத்தை எப்படி அமைப்பது? எப்படியான திரைப்படங்களை திரையிடுவது? மக்களிடம் திரைப்பட சங்கங்களின் நடவடிக்கைகளை எப்படி விரிவுப்படுத்துவது? இப்படியான பின்னணியுடன நாம் அதுபற்றி பின்நோக்கி பார்ப்பது நல்லது என்று நம்புகின்றோம். பணச்செலவு மிகு அதிகமாகும் கலையாகச் சினிமா இருக்கிற காரணத்தால், பணம் வைத்திருப்போர், இக்கலையைத்தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள முடிகிறது. கலை உணர்வு இல்லாத பணக்காரர்கள், சினிமாவை ஒரு வெறும் வியாபாரமாகக் கருதி “ பத்துப் போட்டால் இருபது வர வேண்டும்” என்கிற நோக்கத்தில் படம் எடுத்து சினிமாவை  கெடுத்தார்கள். ஆபாசம் வக்கீரமான உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள், வாழ்க்கையைப் பிரதிபலிக்காத கதைகள் சினிமாவில் இடம்ப்பெற்று “ மசாலாப் படங்கள்” என்கிற பெயரில் அமோகமாக விற்பனை ஆகத்தொடங்கின.

சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. மனித நாகரீகத்திற்கு விஞ்;;ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில, மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. துமிழ்க் கலாசாரத்தை, வாழும் முறையை சினிமாவைப் போல் வேறு எந்த ஊடகமும் பாதித்ததில்லை. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர்களில் பெரும் பகுதி திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதிலிருந்;தே. தமிழ் மக்களின் வாழ்க்கையில் சினிமா எத்தகைய ஆட்சியை செலுத்துகிறதென்பதை உணரலாம்.வர்த்தக தமிழ் சினிமா இந்தியாவின் வறுவான தொழிற்தளமாக அடையாளம் காணப்பட்டாலும், வர்த்தகம் மட்டுமே வளர்ச்சியின் குறியீடாக எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழுக்கு ஆதாயம் செய்வதை விட தமிழை வைத்து ஆதாயம் அடைபவர்கள் அதிகம் இருப்பதைப் போல், சினிமாவை வைத்து கோடிக்கணக்கில பிழைப்பவர்கள் சினிமாவிற்கு திருப்பித் தந்ததும், தருவதும் என்ன என்ற நீண்ட கேள்விகளுடன் தான் நாம் இன்னும் இருக்கின்றோம்!

இந்த நிலையில் சினிமா என்கிற கலையில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர்கள் சிரமப்பட்டு பல நல்ல படங்களை எடுத்தார்கள். எடுத்தாலும், இந்தப்படங்கள் நல்லப் படங்கள், வாழ்க்கையை உண்மையாக சொல்வதாலும் போலித்தனமான கழிசடை கனவுக் காட்சிகளை காட்டாததாலும், ஆபாசக்காட்சிகள் இல்லாததாலும் இந்தப்படங்களை வாங்கித்திரையிட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. நுல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சென்றால் வியாபார சினிமாக்களின் பொய்யும், வ ; சகமும் அம்பலப்பட்டுப் போகுமென்று வியாபாரிகளின் தந்திரமான கணிப்பினால் மக்கள் நல்ல படங்களை விரும்ப மாட்டார்கள், அவைகள் ஓடாது என்கிற பொய்யான காரணங்களை மக்களிடம் திணித்தார்கள். அத்தோடு அவைகள் கலைப்படம, அது மெதுவாக நகரும், “போர” அடிக்கும் என்பதாக கட்டுக்கதைகளை பெரிய ஊடகங்களின் மூலம் கட்டமைத்தார்கள். இதன் மூலமாக ‘நல்ல சினிமாவை” மக்களிடமிருந்து விலகி வைத்ததோடு அந்தப் படங்கள் மக்களிடம் சென்று விடாதபடிக்கு எல்லா வகையான தந்திரங்களையும் மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில், எடுக்கப்பட்ட நல்ல படங்களை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி? அவர்களுக்கு உண்மையான சினிமாவை இனம் பிரித்துக் காட்டுவது எப்படி?

eisenstein1

நல்ல ரசனையும், கலையுணர்வும் கொண்ட இளை ர்கள் சிலர், இதே போன்ற நல்ல படங்களைப் பார்க்க வேண்டும். என்று விரும்பிய இன்னும் சிலரையும் சேர்த்துக் கொண்டு, தாங்களே ஒரு அமைப்பாக உருவானார்கள். இந்த அமைப்புக்கு பெயர் தான் ஃபிலிம் சொசைட்டி அதாவது திரைப்படக்கழகம், திரைப்பட இயக்கம் திரைப்பட சங்கம்; என்று பல்வேறு பெயர்களில் தமது செயல் முனைப்பில் இறங்கினார்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஃபிலிம் சொசைட்டிகள், நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து, எடுத்து வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டுகின்றன. சேன்னையில் சில சிறந்த திரைப்பட சங்கங்கள் இன்றும் தமது திரையிடல்களை செம்மையான முறையில் வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் அணைத்து ஊர்களிலும் ஃபிலிம் சொசைடிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் சிறந்நப் படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிடுவதோடு, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சிறந்த திரைப்பட மேதைகளின் படங்களையும் கொண்டு வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த சொசைட்டிகள் திரையிடுகின்றன.

02

ஃபிலிம்; சொசைடிகளின் தோற்றம்

உலகத்திலேயே முதன் முதலில் பிரான்ஸில்தான் ஃபிலிம் சொசைட்டி தோற்றுவிக்கப்பட்டது. ஃபிலிம் சொசைட்டிகளின் தாக்கத்தினால் பிரெஞ்சு சினிமாவில் ‘புதிய அலை” (நேற றுயஎந) சினிமா இயக்கம்
உலக சினிமாவின் முகத்தையே மாற்றி அமைத்தது. 1958 இல் பிரான்சில் தோன்றிய புதிய அலை இயக்கம் அந்த நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் – சமூகத்திற்கு தேவையான முக்கியமான கலைகளில்
திரைப்படமும் ஒன்று என்று கருதிய நாடுகளில் – ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில், கல்கத்தாவில இயக்குனர் சத்தியஜித் ரேயும், சித்தானந்த தாய் குப்தாவும் சேர்ந்து முதலில்  ஃபிலிம் சொசைட்டிகளை உருவாக்கினார்கள். வங்கத்தில் ஃபிலிம் சொசைட்டியோடு நல்ல சினிமாவும் வளர்ந்தது. இது வளர்ந்து நாளடைவில் இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் ஃபிலிம் சொசைட்டிகள்  அணைத்தும் ஒரு பெரிய அமைப்புக்குள் அடக்கப்பட்டன. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கின்றது. இந்தியாவின் அணைத்த மாநிலங்களின் ஒன்றிணைந்த பிலிம் சொசைட்டிகளின் தலைமை அமைப்பின் பெயர் ‘ ஃபெடரேசன் ஆஃப் பிலிம் சொசைட்டீஸ் ஆஃப் இந்தியா “

குநுனுநுசுயுவுஐழுN ழுகு குஐடுஆ ளுழுஊஐநுவுஐநுளு வுர்நு ஐNவுநுசுNயுவுஐழுNயுடு குநுனுநுசுயுசுஐழுN ழுகு குஐடுஆ ளுழுஊஐநுவுஐநுளு (சர்வதேச திரைப்பட கழகங்களின் சம்மேளனம்) ஐகுகுளு
தமிழகத்தில் திரைப்பட சங்கங்களின் வளர்ச்சிக்கு திரைப்பட மேதை நிமாய் கோ~; பங்களிப்பு பெரிதும் உதவியது.பார்க்கவும் ஃபிலிம் சொசைட்டி அவசியமானது என எண்ணினார். இதன் அடிப்படையில் சென்னையில் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தோன்ற அடிப்படைக் காரணம், நிமாய் கோ~;
தனது ஈடு இணையற்ற பங்களிப்பினால் நல்ல சினிமா மக்களிடம் சென்றடைய அரும்பாடு பட்டார். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் 70 களில் ஏற்பட்ட புதிய திரைப்பட போக்குகளுக்கும், புதிய வகை சினிமாக்கள் மக்களிடம் சேர்வதற்கும,; ருத்ரய்யா, அருண்மொழி, மகேந்திரன், துரை, தேவராஜ், மோகன் போன்றவர்களின் சினிமாவில் மாற்றம் ஏற்ப்டடதோடு, திரைப்பட கழகத்தின் பங்களிப்பினால் சென்னையில் நல்ல சினிமாவை பார்ப்பதற்கான சாளரம் திறக்கப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் சத்ய    தனது திரைப்பட சங்கத்தை தொடங்குவதற்கு முன்பே ஆசியாவில் முதல் திரைப்பட சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்பட சங்கம் 1945- ல் தொடங்கப்பட்டது.என்பது ஆச்சரியம் தரும் விடயமாகும். இன்றைய சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கும், அதன் தனித்துவத்திற்கும் திரைப்பட சங்கங்கள் தான் மூலக்காரணம் என்பதை நம்மவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் திரைப்பட சங்கங்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் நல்ல சினிமாவை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தான் உலக சினிமாவின் புதிய மொழியையும், புதிய திரை படைப்புகளையும் உலகிற்கு தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நல்ல சினிமாவைப்; பற்றி இந்;திய சினிமாவில் அடையாளம் படுத்தும் வகையில் கேரள சினிமாவையும், பெங்கால் சினிமாவையும் சொல்வதுண்டு. இரு மாநிலங்களும் கம்யுனிசம் ஒரு பின்னனியாக இருந்தாலும் நல்ல சினிமா வளர்வதற்கு திரைப்பட இயக்கங்களின் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஜோன் ஆபிரகாமும் அவர் குழுவும் இணைந்து கேரளத்தில் தொடங்கிய ஒடேஸ்ஸா திரைப்பட இயக்கம்; தான் மலையாள சினிமாவின் மூல வேர்களுக்கான காரணம்.’ டீ குடிப்பதற்கு காசில்லாத இளைஞர்களுக்கு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், புரொஜெக்டரை இயக்குவதற்கும், 16அஅ கேமராவை கையாள்வதற்கும் திரைப்படங்களை விவாதிப்பதற்கும் வழியை ஏற்படுத்தித் தந்திருந்தது. ‘ ஒடேஸா திரைப்பட இயக்கம்.’தொலைக்காட்சியைக் கூட பார்த்திராத கிராமத்து மக்கள் உலக சினிமாவை நேரடியாகப் பார்த்தனர்.என்று தனது நினைவுகளில் எழுதுகிறார் புகைப்பட கலைஞர் சு.சு. சீனிவாசன்.

ரீஜினல் ஃபிலிம் புரோமோடிங் சொசைட்டி என்ற அமைப்பு, ஃபெடரே~னோ அல்லது சொசைட்டியோ தமக்கு சொந்தமாக ஒரு படம் வாங்கிக்கொள்ள பணம் கடனுதவி செய்கிறது. சென்னை ஃபெடரே~ன் அவள் அப்படித்தான், பிரதி~;மா, காடு போன்ற படங்களை வாங்கி வைத்திருக்கிறது. புpராந்திய மொழிப் படங்களில் ஆங்கில உப வாசகங்களை இணைத்து வட இந்தியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு ஃபிடரே~ன் அனுப்பி வைக்கிறது.கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் தாமே சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். ஃபிடரே~னில் இனனொரு வசதி மினி நு}ல் நிலையம். சோசைட்டி உறுப்பினர்கள் இங்கு உள்ள அருமையான சினிமா பற்றிய உலகப் பெரும் டைரக்டர்களின் புத்தகங்களைப் படித்துப் பலன் பெறலாம். சமீபத்தில் டெலிவி~னில் ‘ சினிமா எடுக்கும் முறை’ பற்றி ஒரு தொடர் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம் ஃபிலிம் சொசைட்டிகள் தான். டேல்லி ஃபிலிம் பெடரே~ன் தேர்;ந்தெடுத்து இந்திய அரசு அங்கீகரிக்கும் படங்கள் எல்லாம் மாநிலங்களில் சொசைட்டிகளில் வெளியிட அந்த மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

art_numerique

03

ஃபிலிம் சொசைட்டிகளின் பணிகள்

உலக திரைப்பட விழாக்களில் மட்டுமே காணக்கூடிய அல்லது அது போன்ற அபுர்வமான திரைப்படங்களை பல நாடுகளில் இருந்தும் வரவழைத்து சொசைட்டிகளுக்கு கொடுக்கின்றது. டீல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பிற நாட்டு து}தரகங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை வழங்குகின்றன. ஆங்கிருந்து அற்தப் படங்களை திரையிட்டு பார்த்து, தேர்ந்தெடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சொசைட்டிகளுக்கு அனுப்பி, ஆர்வமுள்ள உறுப்பினர்களைப் பார்த்து மகிழுமாறு செய்கிறது

தமிழில் ருத்ரையா, ஜெயபாரதி, மலையாளத்தில் அமூர் கோபாலகிருஸ்ணன்,அரவிந்தன், கன்னடத்தில் கரந்த், கிரீ~; கர்னாட், ஜீ. வி. ஆய்யர் மற்றும் ~;யாம் பெனகல், மிருணாள் சென், ரே போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களைவாங்கி சொசைட்டிகளுக்கு கொடுத்து உதவுகிறது இந்த அமைப்பு. சிறந்த திரைப்படங்கரள அவை எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் என்று அறிந்துக் கொள்வது? மோசமான படங்களில் இருந்து இவர்களின் படங்கள் எந்த விதத்தில் வேறுபட்டு இருக்கின்றன? ஒரு காட்சியை படமாக்கி இருக்கும் முறையில் ஒரு நல்ல டைரக்டருக்கும், மோசமான டைரக்டருக்கும், எங்கே, எப்படி, எந்த விதத்தில் வேறுபாடு காண முடிகிறது? என்பதை அறிந்து கொள்ள ‘பயிற்சி” தேவை. அந்தப் பயிற்சிக்கு ‘ஃபிலிம் அப்ரிசியேசன்ஸ் கோர்ஸ்” என்று பெயர். ஒருவாரம், பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என்று இந்த மாதிரியான கோர்ஸ்களை இந்த சொசைட்டிகள் நடத்துகின்றன.

ஒவ்வொரு படத்தை திரையிட்டு முடித்த பின்னும்
கலந்துரையாடல் நடக்க வேண்டும் என்பது சொசைட்டிகளின் பணியாக முக்கிய பணி;யாக எதிர்ப் பார்க்கப் படுகிறது. படத்தைப பற்றிய அபிப்ராயங்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும் போது அது சினிமா பற்றிய அறிவை வளர்க்க பயன்ப்படும்.

சென்னையில தற்சமயம் ‘ நிழல்” திரைப்பட இயக்கம் மூலமாக குறும்படங்களின் வளர்ச்சியும், குறும்படம் உருவாக்கத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. திரைக்கதை,   பயிற்சி பட்டறையின் மூலமாக குறும்படம் எடுப்பதற்கான பயிற்சியோடு களத்திலேயே மூன்று தினத்தில் ஒரு குறும்படத்தை தயாரித்து தமிழகத்தில் சிறப்பான வகையில் நிழல் திரைப்பட இயக்கம் பணி புரிந்து வருகின்றது.

நல்ல சினிமாவைப் பார்ப்பதோடு, நல்ல சினிமாவை சிறிய முதலீட்டில் உருவாக்குவதற்கான தேவையும், உந்துதலும் நம் மத்தியில் எதிர் காலங்களில் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். நிழல்” போன்ற திரைப்பட இயக்கத்தினர் நம் மத்தியிலும் குறும் படங்களை திரையிட்டு பயிற்சி பட்டறையின்  மூலமாக மூன்றே தினத்தில் படத்தை உருவாக்குவதற்கும், நம்மிடம் நல்ல சினிமா பரவுவதற்கும் உறுதுணை புரிய காத்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.

04

ஒரு சொசைட்டி எப்படி உருவாகிறது?

குறைந்த பட்சம் 100 உறுப்பினர்கள் இருந்து, சரியானபடி நிர்வாகம் நடக்கிறது என்பது ஒரு சொசைட்டியை ஃபெடரேஷன் கருதுமானால் அந்த சொசைட்டி அங்கீகாரம் பெருகிறது.100 பேர் சேரவில்லை என்றால் குறைவான உறுப்பினர்கள் வைத்து ஆரம்பிக்க முடியாதா? ஒரு சொசைட்டியை நடத்துவதற்கு உணர்வு மட்டும் போதாது பணமும் வேண்டும். தியட்டர் வாடகை, புரொஜெக்டர் வாடகை, நிர்வாக செலவு, படம் பெறுவதற்காக ஃபெடரே~னுக்கு கொடுக்க வேண்டிய சிறு தாகை ஆகியவைகளுக்காக ஆண்டுக்கு சுமார் 50 ரூபாய்களை உறுப்பினர்களிடமிருந்து சொசைட்டி பெற்றுக் கொள்கிறது. 50 ரூபாய் செலுத்திய ஒரு உறுப்பினர் மாதத்திற்கு குறைந்தது 2 படங்களும், ஆண்டுக்கு குறைந்தது 40 படங்களும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

நம் சூழலில் நல்ல சினிமாவைக் காண்பதற்கும், அது குறித்து தெரிந்து கொள்வதற்கும் நம்மவர்களிடம் நல்ல ஆர்வம் இருக்கின்றது.  இலங்கையைப் பொறுத்தவரையில் சினிமா மக்களுக்கு இது போன்ற நிறைய அமைப்புகளும் நல்ல திரைப்படங்களை பெரு நகரங்களில் திரையிட்டபடி தான் இருக்கின்றது. ஆனால் பெரு நகரங்களை தவிர்த்து சிறிய நகரங்களில் திரைப்பட இயக்கத்தை இன்று சிறப்பான முறையில் கட்டி எழுப்ப முடியும்.

நம்மிடம் இன்று தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட போதும் அவற்றை நாம் இன்னும் படைப்புணர்வோடு பயன் படுத்தவில்லை என்பது உண்மை, இன்று ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பிடமோ, கலாச்சார அமைப்பிடமோ, மிகச் சிறந்த மல்டி மீடியா புரொஜெக்டர் கருவி இருக்கிறது. ஆனால்; யாரும் அதை நல்ல சினிமா வளர்வதற்காக பயன்ப்படுத்துவதில்லை. என்பது நமது அறியாமையோடு, நமது துரதிஷ்டம் என்று தான் மனம் குமுற வேண்டி உள்ளது. அதனால் முன்னர் போல் திரையரங்குகளில்தான் நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்பதில்லை, ஒரு 50 பேர் அமர்ந்து உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவுக்கு வசதியான ஒரு இருட்டறை ஒன்றை ஏற்படுத்தி அதில் நல்ல சினிமாவை திரையிட்டு காட்டலாம். அத்தோடு படம் பற்றியும், படத்தின் சாராம்சம் பற்றியும் சிறிய விபரக் குறிப்பும், தகவல்களையும் பார்வையாளனுக்கு வழங்கலாம். இதற்கு இன்றைய சூழலில் பெரிய செலவுகள் தேவையில்லை, நல்ல சினிமாவை பார்ப்பதற்கு இன்று டிஜிட்டல் வசதிகள் பெருகி விட்டன. ஆதை நாம் ஆக்க புர்வமாக பயன்ப்படுத்தவும், சிறப்பான திரைப்பட இயக்கத்தை நடத்துவதன் மூலம் நல்ல சினிமா பற்றிய பார்வையைத் து}ண்ட முடியும்.

அதனால் உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் அதுவும் இல்லை என்றால் தோட்டங்களில் ஒரு 20 பேரை இணைத்து சிறிய அளவில் ஒரு திரைப்பட சங்கத்தை தொடங்குங்கள், நல்ல சினிமாவை உலக சினிமாவை உங்களிடம் திரையிட்டு அது பற்றி விவாதியுங்கள், சிறிது சிறிதாக படைப்பு மற்றும் தொழிநுட்பம் ;பற்றி பேசுங்கள். நீங்களும் உங்கள் அளவில் ஒரு சிறிய கேமராவில் உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்களுக்கு பிடித்தவற்றை படம்பிடித்து நேர்த்தியாகத் தொகுத்து அதை திரை இட்டு விவாதியுங்கள். உங்களின் பிரச்சினைகளை உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகளை உரு ஆவணப்படம் போல் எடுத்து திரையிடுங்கள். 20 பேரிலிருந்து எல்லோருக்குமான சினிமா உருவாகும். இப்படி தான் உலகத்திலே மிக சிறந்த சினிமாக்கள் பரிணமித்தன என்பதை நினைவில் என்றும் மறக்காதீர்கள்.

அத்தோடு சிறந்த திரைப்படங்களை திரையிட்டுப் பாருங்கள். ஊரக சினிமாவில் ஈரானிய சினிமா தான் நம் மத்தியில் ஆரம்ப வகை திரையிடலுக்கு மிகவும் ஏற்றது. அதனால் கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுங்கள். முடிந்தால் அந்தப்படங்களை மொழி மாற்றம் செய்து உப தலைப்புடன் திரையிடுங்கள்.   அப்படி மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் நம்மிடம் நிறைய உண்டு. அத்தோடு சிறந்த உலக சினிமாவை உங்கள் ஊரில் திரையிடும் போது கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்யுங்கள். அப்போது தான் நல்ல சினிமா உங்கள் மத்திளில் வேர் கொள்ளும். கலந்துரையாடலின் போது படைப்புணர்வும், சினிமா   பற்றிய தேடலும் நம்மிடம் பெருகும். சுpலர் திரைப்பட இயக்க தேவைகளை நிராகரித்து அரசியல் நோக்குடன்  திரையிடுகிறார்கள் அப்படியான திரையிடல்களில் ரசனையோ நல்ல சினிமா பற்றிய உரையாடலோ ஏற்ப்பட வாய்ப்பில்லாமல் போவதோடு, நல்ல சினிமா வளர்வதற்காக தொடங்கப்பட்ட திரைப்பட இயக்கங்கள் இன்று திசை மாறிபோவதோடு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போய் விடுகிறது. இந்த நிலமை ஏற்படாத வகையில் ஒரு திரைப்படத்தின் படைபடபு சார்ந்தும், ரசணை சார்ந்தும் அதன் உள்ளடக்கம் சார்ந்தும் மனதில் அது ஏற்படுத்திய அவஸ்தையை சார்ந்தும் கலந்துரையாடல் அமையும் போது நல்ல சினிமாவின் ரசணைப் பகிர்தல் வளர்வதோடு, பார்வையாளனும் படைப்பாளியாக மாற்றமடைய முடியும் என்பதை கலந்துரையாடலை நெறிப்படுத்தும் திரைப்பட ஆர்வலர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இப்படியான நோக்கில் நீங்கள் கலந்துரையாடலை படைப்பு சார்ந்து செய்யாத போது பார்வையாளன் தன்னிலிருந்தும் தன் அக உணர்வுகளிலிருந்தும் புதிய தேடலை தீர்மாணிக்கும் மனதின் தேடலைத் தீர்க்காத போது  பார்வையாளன் தன்னிலிருந்தும் திரைப்படம் அவனுள் ஏற்படுத்தி இருக்கும் உணர்வு நிலையிலிருந்தும் அவன் திருப்தி அற்றவனாக வெறுமை நிரம்பியவனாக திரையிடப்பட்ட நிகழ்விலிருந்தும் விலகிப் போவதற்கான  வாய்ப்புண்டு என்பதை திரைப்படம் பற்றிய கலந்துரையாடலை நெறிப்படுத்தும் கவனத்துடன் உசய்ய வேண்டும்.ஏதோ நெறிப்படுத்துவதென்பது தலைமைத்துவமும் தன்னை நிலை நிறுத்துவதற்கான அரசியல் களம் என்று நினைத்தால் அது பார்வையாளனையும் சினிமா ரசணை உள்ளவனையும் து}ரப்படுத்துவதோடு, நல்ல சினிமாவிற்கான தேடலையும் துண்டித்துவிடும்.

05

ஃபிலிம் சொசைட்டி மேலும் சில தகவல்கள்

பெங்க@ரில் உள்ள சுசித்ரா ஃபிலிம் சொசைட்டிக்கு சொந்தமாக ஒரு தியட்டரே இருக்கின்றது. மோகநு}ரில் உள்ள சொசைட்டி (சர்க்கரை தொழிழக ஊழியர்கள்) தரையில் அமர்ந்தே படம் பார்க்கிறார்கள், விவாதிக்கிறார்கள். மிகப்பழையப்படங்களை பார்க்கவும் சொசைட்டியில் வாய்ப்பு இருக்கிறது.  சென்னையில் ‘ மார்த்தாண்ட வர்மா” என்ற பேசாத படம் (ஊமைப்படம் 1930 -க்கு முன் வெளிவந்தது.) திரையிடப்பட்டது. ஓர் ‘hர்மோனியக்காரரும், ஒரு மிருதங்கக் கலைஞரும் திரைக்கு எதிரே உட்கார்ந்து, கதை ஓட்டத்திற்கு ஏற்ப வாசித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
டைரக்~ன் துறையில் சிறந்து விளங்கும் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யுட் மாணவர் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் 500 ரூபாய் பரிசுத்தொகையும் விருதும் வழங்கி கௌரவிக்கின்றது சென்னை ஃபிடரே~ன். பாசு சட்டர்ஜி, மிருனால் சென் போன்றவர்கள் இந்த மாதிரி அமைப்புகளின் ஊக்கத்தால் உயர்ந்தவர்களே. கேரளாவில் ஃபிலிம் சொசைட்டிகள் மிகப் பெருகி இருக்கின்றன. அடூர் கோபாலகிருஸ்ணன் இம்மாதிரி சொசைட்டிகளை சார்ந்து வளர்ந்தவர்கள் கேரளாவில் இன்று’ ஈ நாடு” ‘ இனி யெங்கினும்” போன்ற படங்கள் வருவது இந்த சொசைட்டிகளின் பாதிப்பினால்தான்.

ரீஜினல் ஃபிலிம் புரோமோடிங் சொசைட்டி என்ற அமைப்பு, ஃபெடரே~னோ அல்லது சொசைட்டியோ தமக்கு சொந்தமாக ஒரு படம் வாங்கிக்கொள்ள பணம் கடனுதவி செய்கிறது. சென்னை ஃபெடரே~ன் அவள் அப்படித்தான், பிரதி~;மா, காடு போன்ற படங்களை வாங்கி வைத்திருக்கிறது. புpராந்திய மொழிப் படங்களில் ஆங்கில உப வாசகங்களை இணைத்து வட இந்தியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு ஃபிடரே~ன் அனுப்பி வைக்கிறது.கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் தாமே சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். ஃபிடரே~னில் இனனொரு வசதி மினி நு}ல் நிலையம். சோசைட்டி உறுப்பினர்கள் இங்கு உள்ள அருமையான
சினிமா பற்றிய உலகப் பெரும் டைரக்டர்களின் புத்தகங்களைப் படித்துப் பலன் பெறலாம்.

டெலிவி~னில் ‘ சினிமா எடுக்கும் முறை’ பற்றி ஒரு தொடர் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம் ஃபிலிம் சொசைட்டிகள் தான். டேல்லி ஃபிலிம் பெடரே~ன் தேர்;ந்தெடுத்து இந்திய அரசு அங்கீகரிக்கும் படங்கள் எல்லாம் மாநிலங்களில் சொசைட்டிகளில் வெளியிட அந்த மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
06

 உலகத்தில் மிகச் சிறந்த இயக்குனர்களாக கருதப்பட்ட அணைவரினதும் சிறப்புக்கு பின்பு நல்ல திரைப்படங்களும் திரைப்பட இயக்கங்களின் உறுதுணையும் இருந்துள்ளதை இங்கே நினைவு படுத்தி செல்லலாம் என்று நினைக்கின்றேன். அந்த வகையில் நம் நாட்டிலிருந்து தென்னகம் சென்று தன் திரைப்படங்களின் மூலம் புகழ்ப் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பானுமகேந்திராவின் நினைவுகளை நாமும் பகிர்ந்து கொள்வோம்:

நான் படிச்ச பள்ளி ஜெஸ்யுட் பாதிரிமார்கள் நடத்தின பள்ளி. ஏனக்கு ஆசிரியராக இருந்த ஃபாதர் டோரி பெரிய ரசிகர். அப்பவே 6.00 மணிக்கு மேல 16 எம் எம்- ல தினமும் படம் பாமிப்பாரு ‘ பைசைகல் தீவ்ஸ்” படம் அங்க தான் முதல்ல பார்த்தேன். ‘புனே இன்ஸ்டிடியுட்” எல்லாம் அப்புறம் தான். அப்ப நான் தொடர்ந்து பார்த்த சினிமாவோட தாக்கம் எனக்கு பயங்கரமா இருந்தது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாதிரியார் புரொஜக்டர் மூலம் காண்பிச்ச படங்கள் பாதிப்பை ஏற்படுத்திச்சி. ஏன்று கூறுகிறார். பாலுமகேந்திரா
முதலாவதாக திரையிடும் படங்கள் எல்லோருக்கும்  ஓரளவுபுரிகிற கதைப்படங்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்த எடுப்பில் சிக்கலாகத் தோன்றும் படங்களைக் காட்டினால் அவற்றிற்குப் பழக்கமற்ற பார்வையாளர்கள் குழம்பிப் போகலாம். அதனால் மிகச்சிறந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட வேண்டும். பார்வையாளர்;கள் தொடர்ந்து வருவதும் இதனால் பாதிக்கப் படலாம். செக்ஸ் காட்சிகள் நிறைந்தப் படங்களையும இது போலவே துவக்கத்தில்  தவிர்ப்பது நல்லது. படம் பார்க்க வருபவர்கள் சினிமா சங்கத்தின் செயற்பாடு குறித்து தவறாக அபிப்ராயம் கொள்வதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

உலக சினிமாவில ஈரானிய சினிமாதான் நமது பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா  பற்றிய புதிய கதைகளை திறந்து வைப்பதற்கான மிகச் சரியான திரைப்படமாக இருக்கும் என்பது எனது திரையிடல்களில் நான் கண்ட அனுபவம். ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் விதம், காட்சிகள், அழகியல், மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்ந்த நடிப்புத் திறன். நடிகர்களின் வெளிப்பாடும், வாழ்வை மிக அருகில் கொண்டு வந்து பார்வையாளனின் அகத்தை ஊடுருவும் கலை நேர்த்தியும் நமது பார்வையாளர்களுக்கு பிடிக்கும் அத்தோடு நமது தமிழ் மனம் கதை தேடும் மரபுகள் கொண்டது, அதனால் ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் வகை நமக்கேற்ற வகையுடன் இருப்பதனால் நமது பார்வையாளர்களிடம் அத்திரைப்படங்கள் பெரும்பான்மையாக திரையிடவதனால் அது நல்ல சினிமாவுக்கான புதிய வாசல்களை பார்வையாளனின் மனதில் தேட செய்யும், நல்ல சினிமா பற்றிய  மனப்பதிவு” இறை அருள் மாதிரி அவனுள் இறங்கும். ஆதன் பின்பு நர்ர சினிமாவை கொண்டு செல்வது இலகுவான விடயம் அதனால் ஒவ்வொரு படம் திரையிடப்படும் பொழுதும் அப்படத்தின் கதை சுருக்கம், அப்படத்தினல் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள் போன்றவற்றை சிறு பிரசுரங்களாக விநியோகிக்கலாம். ஒரு சில நல்ல படங்களை திரையிடப்பட்ட பின்னர் படங்களைப் பற்றிய அங்கத்தினர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். பல முறை பார்த்து ரசித்து புரிந்துக் கொள்ள வேண்டிய படம் என்று ஒரு படத்தை பார்வையாளர்கள் எண்ணினால் அவற்றைப் பற்றிய விபரங்களுடன் மீண்டும் திரையிட்டு திரனாய்வு செய்து, நம் மனப்பதிவை எழுதி வெளியிடலாம்.

உங்கள் பகுதியில் ஒன்று கூடுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்வதோடு சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், நல்ல சினிமா சஞ்சிகைகள் ஆகியவற்றை அங்கத்தினர்களுக்கு வரவழைத்து தரலாம். ஓத்த கருத்தும், புதிய சிந்தனையும் கொண்ட நால்வர் ஒன்று கூடினால் தகுந்த செயற்பாட்டிற்கான புதுப்புது எண்ணங்கள் இயல்பாகவே தோன்றும். நல்ல சினிமாவை மக்களிடம்  கொண்டு செல்வதற்கு, நம் மத்தியில் ஒரு திரைப்பட கழகத்தை ஏற்படுத்துவதற்கும் நாம் செய்கினற அதேவேளையில், திரையிடப்படும் திரைப்படங்களின் கருத்து, காட்சி, மற்றும் அது நமது சமூக சூழலுக்கும், அரசியல், புறகாரண காரிய சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றதா என்பதைக் கண்டு உணர்ந்து ஆய்வு செய்து திரையிடவும், முதல் முறையாக செய்வதனால் மிகுந்த கவனத்துடன் இவைகளை முன்னெடுக்க வேண்டும்.

Older Posts »

Categories